ராகுல் காந்தியால் இந்தியாவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது - தமிழிசை


ராகுல் காந்தியால் இந்தியாவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது - தமிழிசை
x
தினத்தந்தி 15 Dec 2018 1:45 PM GMT (Updated: 15 Dec 2018 1:45 PM GMT)

ராகுல் காந்தியால் இந்தியாவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

திமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமான உற்பத்தியை அனுமதித்ததே சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணம். ராகுல் காந்தியால் இந்தியாவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த அதிகாரிகள் தந்த தகவலின் பேரிலேயே பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.  மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்று கருத்து இல்லை.  பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாக முதல்வர் கூறியதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story