தமிழ் மொழி இருக்கும் வரை கருணாநிதியின் புகழ் இருக்கும் - பினராயி விஜயன்


தமிழ் மொழி இருக்கும் வரை கருணாநிதியின் புகழ் இருக்கும் - பினராயி விஜயன்
x
தினத்தந்தி 16 Dec 2018 1:30 PM GMT (Updated: 16 Dec 2018 1:30 PM GMT)

தமிழ் மொழி இருக்கும் வரை கருணாநிதியின் புகழ் இருக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சென்னை,

கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:

பெரியார், அண்ணா வழியில் சமூக சீர்திருத்தங்கலை முன்னெடுத்தவர் கருணாநிதி. தமிழ் மொழி இருக்கும் வரை கருணாநிதியின் புகழ் இருக்கும். சமூக பொருளாதார மாற்றம் தான் கருணாநிதியின் உயிர் மூச்சாக இருந்தது.

 திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் உலகில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.  மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டவர் கருணாநிதி. 

அரசியல், இலக்கியம், திரைத்துறை என எல்லாவற்றிலும் சாதனை படைத்தவர் கருணாநிதி. கருணாநிதியின் புகழை ஒரு பேச்சில் விவரித்து விட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story