பள்ளி மாணவியை கடத்திய 3 இளைஞர்கள் -ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்
ஈரோட்டில் பள்ளி மாணவியை கடத்தி ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே வெள்ளி விளக்கு பகுதியில் கடந்த 22-ஆம் தேதி 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது பள்ளி மாணவி கடத்தப்பட்டார். சம்பவத்தன்று, மாணவியுடன் சமூக வலைத்தளம் மூலம் பழகிய விக்னேஷ் என்ற 19 வயது இளைஞர், அவரை கடத்திச் சென்றார். இதையடுத்து அவரை முதலில் திருப்பூருக்கும் பின்னர் சென்னைக்கும் அழைத்துச் சென்ற விக்னேஷ், ஓடும் பேருந்தில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் இருந்த மாணவியை மீட்ட போலீசார், விக்னேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜ பூபதி, ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்முறைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து விக்னேஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story