ஜனவரி 17ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு-அரசாணை வெளியிட்டது தமிழக அரசு


ஜனவரி 17ல் அலங்காநல்லூரில்  ஜல்லிக்கட்டு-அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
x
தினத்தந்தி 27 Dec 2018 9:00 AM GMT (Updated: 27 Dec 2018 9:00 AM GMT)

அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படுகிறது.

அவ்வகையில் அடுத்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி 15-ம் தேதி மதுரை - அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

Next Story