உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது


உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது
x
தினத்தந்தி 17 Jan 2019 3:05 AM GMT (Updated: 17 Jan 2019 3:05 AM GMT)

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. போட்டியில் 1400 காளைகளும், 848 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

மதுரை,

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று முன் தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது.  இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக 533 காளைகள் வந்தன.  இவற்றில் 475 காளைகள் போட்டியில் பங்கேற்றன.  150 காளைகள், வீரர்களிடம் பிடிபட்டன.  550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.  ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று 2-வது நாளாக பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. 

இந்த நிலையில், இன்று உலக புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.  வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் சுமார் 1400 காளைகளை, 800 மாடுபிடி வீரர்கள் அடக்க உள்ளனர். 

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். கார், இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளி காசுகள், உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மதுரை எஸ்பி தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story