எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை தற்போது பிரதமர் மோடிதான் நிறைவேற்றி வருகிறார் - நிர்மலா சீதாராமன்


எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை தற்போது பிரதமர் மோடிதான் நிறைவேற்றி வருகிறார் - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 20 Jan 2019 8:43 AM GMT (Updated: 20 Jan 2019 8:43 AM GMT)

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை தற்போது பிரதமர் மோடிதான் நிறைவேற்றி வருகிறார் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருச்சியில் ராணுவ தொழிலக உற்பத்தி வழித்தட திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை தற்போது பிரதமர் மோடிதான் நிறைவேற்றி வருகிறார்.  திருச்சி மற்றும் ஆவடியில் உள்ள பொதுத்துறை, பாதுகாப்புத் துறை நிறுவனங்களை மூடும் திட்டம் இல்லை.

ரபேல் விவகாரத்தில் சரியான புரிதல் இல்லாமல் மத்திய அரசை விமர்சனம் செய்கிறார்கள்.

தொழில் முதலீட்டாளர்களை நாங்கள் அழைத்து வருகிறோம். அதனை மாநில அரசு பயன்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story