கோவையில் மெட்ரோ ரயில்: ஒரு வருடத்திற்குள் திட்டம் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
கோவையில் மெட்ரோ ரயில் பணிகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது, ஒரு வருடத்திற்குள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசி உள்ளார்.
சென்னை,
கோவையில் அமைய உள்ள கொடிசியா தொழிற்பூங்காவிற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொழிற்பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய தொழில் நகரமாக கோவை உள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் பணிகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. ஒரு வருடத்திற்குள் திட்டம் செயல்படுத்தப்படும். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story