மாயமான பள்ளி மாணவி எலும்புக்கூடாக மீட்பு : பாலியல் பலாத்காரம் செய்து கொலையா?


மாயமான பள்ளி மாணவி எலும்புக்கூடாக மீட்பு : பாலியல் பலாத்காரம் செய்து கொலையா?
x
தினத்தந்தி 11 Feb 2019 3:50 PM GMT (Updated: 11 Feb 2019 3:50 PM GMT)

திருத்தணி அருகே கடந்த செப்டம்பரில் மாயமான 10ம் வகுப்பு மாணவியின் உடல், எலும்புக் கூடாக மீட்கப்பட்டு உள்ளது.

சென்னை,

* திருத்தணி அருகே கடந்த செப்டம்பரில் மாயமான 10ம் வகுப்பு மாணவியின் உடல், எலும்புக் கூடாக மீட்கப்பட்டு உள்ளது. பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 

* திருத்தணி அருகே உள்ளது, பள்ளிப்பட்டு. இங்குள்ள ஒரு பள்ளியில் 10 வது வகுப்பு படித்து வந்த சரிதா என்ற மாணவ கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திடீரென மாயமானார். 5 மாத தேடுதல் வேட்டைக்குப்பின், கீச்சளம் என்ற கிராமத்தில் ஒரு ஏரி ஒடையில், எலும்பு கூடுகள் சிதறி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

* போலீசார் நடத்திய விசாரணையில் மாயமான பள்ளி சிறுமி சரிதாவின் எலும்பு கூடு இது என தெரிய வந்தது. பள்ளிக்கு சென்ற மாணவி, எலும்புக்கூடாக கிடைத்த தகவல் அறிந்து அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

* பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஏரி ஓடையில் மாணவி சரிதா புதைக்கப்பட்டாரா என்ற கோணத்தில், திருத்தணி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

* எனவே, விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் யார் என்பது அடையாளம் தெரியும் என்று திருவள்ளூர் எஸ்பி - பொன்னி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story