திமுக ஆட்சியில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் : கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு


திமுக ஆட்சியில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் : கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 23 Feb 2019 9:50 AM GMT (Updated: 23 Feb 2019 9:50 AM GMT)

திமுக சொல்பவரே பிரதமராக வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

திமுக சொல்பவரே பிரதமராக வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

 அப்போது அவர் பேசுகையில், 

மத்தியில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். திமுக வெற்றி பெறும் என்பதால், தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், அதிமுக அரசு தள்ளிப்போடுகிறது. லோக்சபா தேர்தலுடன் 21 தொகுதி இடைத்தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும். 

பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பின் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் .

 மேலும் கட்சி பாகுபாடு இல்லாமல் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Next Story