தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. சிலர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுக கூறி உள்ளது.
திமுகவினரும், அமமுகவினரும் பணம் கொடுத்தார்கள் என பொதுமக்களே தெரிவித்தார்கள்.
தூத்துக்குடியில் மக்களுக்கு ரூ.200, 300 தான் கொடுத்தனர். இது அவர்களுக்கு சிறிய தொகை தான். மக்களின் ஏழ்மையை தங்கள் லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்வது தவறு என்பது எனது கருத்து.
கனிமொழியை விட தூத்துக்குடியில் போட்டியிட எனக்கு அதிக உரிமை உள்ளது என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story