இயக்குநர் பா.ரஞ்சித்தை நாளை மறுநாள் வரை கைது செய்ய கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை


இயக்குநர் பா.ரஞ்சித்தை நாளை மறுநாள் வரை கைது செய்ய கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
x
தினத்தந்தி 19 Jun 2019 1:18 PM GMT (Updated: 19 Jun 2019 1:18 PM GMT)

இயக்குநர் பா.ரஞ்சித்தை நாளை மறுநாள் வரை கைது செய்ய கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி இயக்குநர் பா. ரஞ்சித் தொடர்ந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பா.ரஞ்சித்தின் ஜாமின் மனு, நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி, முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சில திருத்தங்கள் இருப்பதால் அதனை சரிசெய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை ஜுன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை ரஞ்சித் மீது எவ்வித கைது நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என தெரிவித்தார். 

Next Story