அத்திவரதர் உற்சவத்தின் 13-வது நாள் : பச்சை பட்டு உடுத்தி காட்சி அளிக்கும் பெருமாள்
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 13ஆம் நாளான இன்றைய தினம், பச்சை பட்டு உடுத்தி மலர் மாலை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 13ஆம் நாளான இன்றைய தினம், பச்சை பட்டு உடுத்தி, மலர் மாலை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சனிக்கிழமை ஏகாதசி பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் வழக்கத்தைவிட இன்றைய தினம் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்திவரதரை தரிசிக்க வரும் முக்கிய பிரமுகர்களின் வருகையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, அவர்களை அழைத்து செல்ல கியூ வரிசை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வெளிமாநில பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story