வேலூர் தொகுதியில் விஜயகாந்த் உட்பட தேமுதிக நிர்வாகிகள் பிரசாரம் - பிரேமலதா விஜயகாந்த்


வேலூர் தொகுதியில் விஜயகாந்த் உட்பட தேமுதிக நிர்வாகிகள் பிரசாரம் - பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 15 July 2019 7:37 AM GMT (Updated: 15 July 2019 7:37 AM GMT)

வேலூர் தொகுதியில் விஜயகாந்த் உட்பட தேமுதிக நிர்வாகிகள் பிரசாரம் செய்ய உள்ளோம், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கே.கே.நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விரைவில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.  வேலூர் தொகுதியில் விஜயகாந்த் உட்பட தேமுதிக நிர்வாகிகள் பிரசாரம் செய்ய உள்ளனர். தேதியை தலைமைக்கழகம் விரைவில் அறிவிக்கும்.

 வேலூர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யாமல் தேர்தலை ரத்து செய்தது நியாயம் அல்ல. தற்போது அதே வேட்பாளர் போட்டியிடுகிறார். பணப்பட்டுவாடா நடக்கிறது. தகுதி நீக்கம் செய்திருந்தால் இதற்கு தீர்வு வந்திருக்கும்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், கல்வியை அரசியல் ஆக்கிவிட்டதாக குற்றம் சாட்டிய அவர், இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தான் புதிய கல்விக் கொள்கை அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Next Story