நீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்


நீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 17 July 2019 5:47 AM GMT (Updated: 17 July 2019 6:00 AM GMT)

நீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை

தியாகிகள் நாளையொட்டி சென்னை காந்தி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். 

சங்கரலிங்கனார், பாஷ்யம், செண்பகராமன் சிலைகளுக்கு ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட அனைத்து உரிமைகளும் அதிமுக ஆட்சியில் மீட்கப்பட்டன. நீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும், ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி என்பது மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது.எனவே மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு அரசு எப்போதும் அனுமதி வழங்காது

புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா கருத்து தொடர்பாக பதில் அளித்த அமைச்சர், கருத்து தெரிவிக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.

தபால்துறை தேர்வினை தமிழில் நடத்த வேண்டும் என்பது தான் அரசினுடைய நிலைப்பாடும். அதனடிப்படையில் தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இந்த முடிவு அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Next Story