பொன் மாணிக்கவேலுக்கு வாகனங்களும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன் மாணிக்கவேல் கேட்டபடியே அதிகாரிகளும், அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை
சிலை கடத்தல் வழக்கை கையாளும் பொன் மாணிக்கவேலுக்கு சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்ற திமுக உறுப்பினர் ஐ பெரியசாமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* பொன் மாணிக்கவேல் தன்னிச்சையாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது
* பொன் மாணிக்கவேலுக்கு வாகனங்களும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது .
* 204 அதிகாரிகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
* சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன் மாணிக்கவேல் கேட்டபடியே அதிகாரிகளும், அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.
Related Tags :
Next Story