பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் ரெயில் சேவை நேரம் மாற்றப்படுவதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 36 ரெயில் சேவைகள் ஜூலை 21-ம் தேதி காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் ரெயில் சேவை தொடங்கும்.
சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.10 மணி வரை ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை-கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 1.50 வரை ரெயில்வே சேவை ரத்து செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் நலன் கருதி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சென்னை கடற்கரை- தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு சிறப்பு ரெயில் சேவை தொடங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவிததுள்ளது.
Related Tags :
Next Story