ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு


ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு
x
தினத்தந்தி 17 Aug 2019 9:57 AM GMT (Updated: 17 Aug 2019 9:57 AM GMT)

கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பூமி குளிர்ந்து, குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காகவும், குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்யவும் அணையில் இருந்து நாளை முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை தண்ணீர்  திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  உத்தரவிட்டுள்ளார்.

Next Story