ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் - மு.க.ஸ்டாலின்


ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 21 Aug 2019 9:58 AM GMT (Updated: 21 Aug 2019 9:58 AM GMT)

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மும்முரம் காட்டி வருகிறது.  இதனிடையே ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ, "லுக் அவுட் நோட்டிஸ்" பிறப்பித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனத்தை தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம், ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுனர், வழக்கை சட்டரீதியாகவே அவர் சந்திப்பார். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக நடத்தும் போராட்டத்தில் 14 எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளன" என்று கூறினார்.

Next Story