சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்


சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
x
தினத்தந்தி 11 Oct 2019 9:36 AM GMT (Updated: 11 Oct 2019 9:36 AM GMT)

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்தடைந்தார்.

சென்னை,

2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியா வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.   இதற்காக  இன்று பிற்பகல் சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் ஜி ஜின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு  சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்தடைந்தார். சிறிது நேரம் ஓய்வெடுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்,  மாலை 4 மணிக்கு காரில் சர்தார் பட்டேல் ரோடு, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரம் செல்கிறார். சீன அதிபர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சீன அதிபர் ஜி  ஜின்பிங் கிண்டி ஐடிசி ஹோட்டலுக்கு வந்ததை அடுத்து, ஜிஎஸ்டி சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. சாலையின் இரு புறமும் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Next Story