மாமல்லபுரத்தில் இருந்து சென்னை புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
மாமல்லபுரத்தில் இருந்து சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சீன அதிபர் புறப்பட்டார்.
மாமல்லபுரம்,
இந்தியாவுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் வந்த ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் நடந்தபடி பேசியவாறே அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள அற்புதமான சிற்பங்கள், கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்த்தனர்.
பின்னர் கார் மூலம் ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோவிலுக்கு சென்று பார்த்து ரசித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை இரு தலைவர்களும் கண்டு ரசித்தனர். பின்னர் சீன அதிபருக்கு இரவு உணவு விருந்தை பிரதமர் மோடி அளித்தார்.
அதன்பிறகு திட்டமிட்ட நேரத்தை விட கூடுதலாக 1 மணி நேரத்திற்கும் மேலாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, ஜி ஜின்பிங், காரில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டார். மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ஜி ஜின்பிங்கை கார் வரை வந்து பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார்.
Related Tags :
Next Story