'அதிமுக நிலைத்து நிற்கும்' சசிகலா, தினகரனுக்கு இடம் கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


அதிமுக நிலைத்து நிற்கும் சசிகலா, தினகரனுக்கு இடம் கிடையாது  - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2019 5:51 AM GMT (Updated: 17 Oct 2019 5:51 AM GMT)

அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு இடம் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

அதிமுகவின் 48-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

ஜெயலலிதா கூறியபடி உலகம் உள்ளவரை அதிமுக நிலைத்து நிற்கும். தமிழகத்தில் அதிமுகவை விட பெரிய இயக்கம் எதுவும் இல்லை. ஒவ்வொரு சோதனையின்போதும் அதிமுக வீறு கொண்டு எழும். உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும். அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு இடம் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story