நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - சத்யபிரதா சாகு


நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது -  சத்யபிரதா சாகு
x
தினத்தந்தி 19 Oct 2019 10:16 AM GMT (Updated: 19 Oct 2019 10:16 AM GMT)

நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிவடையவுள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நாளை அனுப்பி வைக்கப்படும்.

தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story