சுஜித் மரணம் என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாது - லதா ரஜினிகாந்த்
சுஜித் மரணம் என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாது என லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை போயஸ் கார்டனில் லதா ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சுஜித்தின் நிலை குறித்து ரஜினிகாந்த என்னிடம் கேட்டவாறே இருந்தார், சுஜித் மீண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது. சுஜித் மரணம் என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இது ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு.
நடக்கக் கூடாது என அனைவரும் நினைத்து இருந்தோம். அது நடந்து விட்டது.
சாதி, மதம் பார்க்காமல் நம் அனைவரையும் குழந்தை சுஜித் ஒன்றிணைத்தான்.
குழந்தைகளுக்கு பெற்றோர் தான் பாதுகாப்பு, அவர்கள் நம்மை நம்பி தான் உள்ளனர். பாதுகாப்பின்றி குழந்தைகள் விளையாட பெற்றோர் அனுமதிக்ககூடாது.
குழந்தைகளுக்காக மட்டுமே முழுநேரம் செயல்படும் குழுவை அமைக்கவுள்ளோம். குழந்தைகள் நலத்திற்காக பணியாற்ற அனைவரும் வாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story