சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த தஹில்ரமானி ராஜினாமா செய்ததை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் ஏபி சஹியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்தது.
இதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார். நவம்பர் 13ந் தேதிக்குள் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கவும் ஜனாதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
தற்போது பாட்னா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹி பதவி வகித்து வருகிறார்.
Related Tags :
Next Story