மக்கள் நீதி மய்யத்திற்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்க கமல்ஹாசன் திட்டம்
மக்கள் நீதி மய்யத்திற்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்க அதன் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளார்.
சென்னை
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிதாக விரிவாக்கம் செய்திருக்கும் கட்டமைப்பில், கட்சியின் அனைத்து நிலைகளிலும் பொறுப்பாளர்களை நியமிக்கும் திட்டத்தின்படி ஏற்கனவே சில பொறுப்புகளுக்கான நியமனங்களை அறிவித்துள்ளேன். அதை தொடர்ந்து, மேலும் கீழ்க்கண்ட சில பொறுப்புகளுக்கான நியமனங்களை இப்போது அறிவிக்கிறேன்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி வரும் 2021-ல் தமிழகத்தின் அரசியலை மாற்றியமைக்கும் லட்சியத்தை வலுப்படுத்த கட்சி தொண்டர்களும், என் அன்பிற்குரிய நற்பணி இயக்கத்தினரும் தற்போது நியமிக்கப்படும் பொறுப்பாளர்களோடு இணைந்து செயல்பட்டு, மக்களுக்கான நல்லாட்சி கனவை நிறைவேற்றிட உழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்திருக்கும், விண்ணப்பங்களில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தொடர்ந்து அறிவிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story