பெட்ரோல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்வு


பெட்ரோல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்வு
x
தினத்தந்தி 12 Nov 2019 1:17 AM GMT (Updated: 12 Nov 2019 1:29 AM GMT)

பெட்ரோல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி,  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.18 ஆகவும், டீசல்,விலையில் 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் உள்ளது. 

இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.  பெட்ரோல் விலை கடந்த 5 நாட்களாக, விலை அதிகரித்து இருப்பது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story