பொங்கலுக்கு முன்பாக சட்டசபை கூட்டம் நடைபெற வாய்ப்பு


பொங்கலுக்கு முன்பாக சட்டசபை கூட்டம் நடைபெற வாய்ப்பு
x
தினத்தந்தி 15 Dec 2019 12:24 PM GMT (Updated: 15 Dec 2019 12:24 PM GMT)

அடுத்த மாதம் பொங்கலுக்கு முன்பாக சட்டசபை கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28-ந் தேதி தொடங்கி ஜூலை 20-ந்தேதிவரை நடைபெற்றது. துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு சட்ட மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.

6 மாதத்திற்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பதால் அடுத்த மாதம் (ஜனவரி) 19-ந்தேதிக்குள் சட்டசபையை கூட்ட வேண்டும்.

அந்த வகையில் பொங்கலுக்கு முன்பாக சட்டசபை கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதியுடன் முடிந்து புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் ஜனவரி 6-ந்தேதிக்குள் நடைபெறும். 

அதன்பிறகு சட்டசபையை கூட்டி 12-ந்தேதிக்குள் சபை கூட்டத் தொடரை முடிக்க ஏற்பாடு நடந்து வருவதாக சட்டபேரவை செயலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Next Story