பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு ;வாகன ஓட்டிகள் கலக்கம்


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு ;வாகன ஓட்டிகள் கலக்கம்
x
தினத்தந்தி 11 Jan 2020 2:58 AM GMT (Updated: 11 Jan 2020 2:58 AM GMT)

ஈரான் - அமெரிக்கா போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. கடந்த  1 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.12 ஆக விற்பனையானது.  இன்று  ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.98 ஆக விற்பனையாகிறது. 

கடந்த 10 தினங்களில், பெட்ரோல் விலை சுமார் 86 காசுகள் அதிகரித்துள்ளது. அதேபோல், டீசல் கடந்த 1 ஆம் தேதி ஒரு லிட்டர் ரூ.71.86 -க்கு விற்பனையானது. இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 73.10 ஆக உள்ளது.  கடந்த 10 தினங்களில் டீசல் விலை, சுமார் ரூ.1.24 அதிகரித்துள்ளது.  

தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை சென்று கொண்டிருப்பதால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். டீசல் விலை உயர்வினால், அத்தியாவசிய பொருட்களில் விலையும் உயருமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

இன்று  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.98 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.73.10 ஆகவும் உள்ளது. 


Next Story