சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை - டிடிவி தினகரன்


சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை - டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 23 Jan 2020 12:21 PM GMT (Updated: 23 Jan 2020 12:21 PM GMT)

சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- 

பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரியது. தமிழர் நலனுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த மாபெரும் தலைவர் பெரியார் குறித்து பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து உண்மை தன்மை கேட்டறிந்து பேசியிருக்கலாம்.

கடவுள் மறுப்பிற்கு எதிரானவர்கள் கூட பெரியாரை மதிப்பவர்கள் தான். தந்தை பெரியார் ஒரு சமூக நீதி போராளி, பெண்ணுரிமை போராளி என தெரிவித்தார். பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, அவர் ஒரு இயக்கம். ரஜினிகாந்த், தலைவர்களின் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது 

மேலும் , பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் முனைப்போடு செயல்பட வேண்டும.

சசிகலா சிறையில் இருந்து வெளியில் வர சட்ட ரீதியிலான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். நானோ, சசிகலாவோ துரோகிகளோடு ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

Next Story