டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக்கவசம் - டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தகவல்


டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக்கவசம் - டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 16 March 2020 10:30 PM GMT (Updated: 16 March 2020 9:41 PM GMT)

டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

அனைத்து மாவட்ட மேலாளர்களும் அனைத்து கடை பணியாளர்களுக்கும் நல்ல தரத்துடன் கூடிய முகக்கவசம் மற்றும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளுக்கு கை சுத்திகரிப்பான் (சானிடைசர்) வழங்க உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் தங்களுடைய மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் சுத்தமாக நிர்வகித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மாவட்ட மேலாளர்களும் இந்த சுற்றறிக்கை கிடைத்ததற்கான ஒப்புதலை அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story