கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டசபைக்கு வரவில்லை
கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தியின் காரணமாக சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இடைவிடாமல் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர், விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொள்ளவில்லை. கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தியின் காரணமாக சட்டசபை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
சட்டசபை நிறைவு நாளான இன்று (செவ்வாய்கிழமை) மொத்தம் 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இதில், பால்வளத்துறையும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்றைய கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Related Tags :
Next Story