தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை திரும்பிய 43 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும் 2 பேருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story