தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளியீடு
தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 400-ஆக உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story