துப்புரவு பணியாளர்கள் இனி "தூய்மை பணியாளர்கள்" - தமிழக அரசு அரசாணை வெளியீடு
துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,
துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ், துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் தூய்மை பணி மேற்கொள்பவர்களை கவுரவப்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story