சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 8:46 AM GMT (Updated: 26 Jun 2020 8:46 AM GMT)

சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 569 இருந்தது.

இந்நிலையில் இன்று மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 101 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மேலும் சேலம் மாவட்ட மக்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story