தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 28 Jun 2020 1:27 PM GMT (Updated: 28 Jun 2020 1:43 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 1,079 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முந்தைய நாள் எண்ணிக்கையை மிஞ்சும் வகையில், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதன்படி, தமிழகத்தில் கடந்த 25ந்தேதி ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.  நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,645 பேருக்கும், நேற்று 3,713 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.  இதனால், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்திருந்தது.

இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்தனர்.  இதனால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது.  இதுபற்றி தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,025ல் இருந்து 1,079 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

கடந்த 17ந்தேதி, 2,174 என்ற எண்ணிக்கையில் இருந்த பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து, கடந்த 24ந்தேதி 2,866 ஆக உயர்ந்திருந்தது.  தொடர்ந்து 8 நாட்களாக 2 ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு எண்ணிக்கை இருந்தது.  இந்த சூழலில், தொடர்ந்து 4வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500க்கு கூடுதலாக சென்றுள்ளது.

Next Story