தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்


தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்
x
தினத்தந்தி 30 Jun 2020 9:20 PM GMT (Updated: 30 Jun 2020 9:20 PM GMT)

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்றிரவு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

* சுனில்குமார்- சீருடை பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி.யான இவர், மனித உரிமை கமிஷனுக்கு மாற்றப்பட்டார்.

* டேவிட்சன் தேவாசீர்வாதம்- மதுரை போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், மாநில தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

* ஏ.கே.விஸ்வநாதன்- சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், மாநில அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி ஏற்பார்.

* எம்.ரவி- பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர், ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார்.

சென்னை கமிஷனர்

* மகேஷ்குமார் அகர்வால்- மாநில அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* ஜெயராம்- சென்னை தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றும் இவர், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

* அமல்ராஜ்- திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யான இவர், சென்னை தலைமையக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார்.

* கணேஷமூர்த்தி- சென்னை பொருளாதார பிரிவு ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

* தினகரன்- சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பதவி வகிக்கும் இவர், சென்னை தெற்கு கூடுதல் கமிஷனராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

மதுரை கமிஷனர்

* பிரேம் ஆனந்த் சின்ஹா- சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனரான இவர், மதுரை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்பார்.

* அருண்- சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனரான இவர், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* சஞ்சய்குமார்- திருப்பூர் போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

* லோகநாதன்- தஞ்சை சரக டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி போலீஸ் கமிஷனராக பதவி ஏற்பார்.

* கபில்குமார் சரத்கர்- சென்னை வடக்கு இணை கமிஷனராக பதவி வகிக்கும் இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

* கண்ணன்- உள்நாட்டு பாதுகாப்பு டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார்.

ஐ.ஜி.யாக பதவி உயர்வு

* சந்தோஷ்குமார்- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை நிர்வாக பிரிவுக்கு பொறுப்பு ஏற்கிறார்.

* தேன்மொழி- காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* கார்த்திகேயன்- கோவை சரக டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

* ஜோஷி நிர்மல்குமார்- திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று ‘எஸ்டாபிளிஸ்பென்ட்’ பிரிவுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பவானீஸ்வரி- கடலோர பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

* பாலகிருஷ்ணன்- திருச்சி சரக டி.ஐ.ஜி.யான இவர் சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* விஜயகுமாரி- சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனரான இவர், கடலோர பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

* ஏ.ஜி.பாபு- சென்னை தலைமையக இணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டார்.

* மகேஸ்வரி- சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனரான இவர் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார்.

போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர்

* எழிலரசன்- சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனரான இவர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

* செந்தில்குமாரி- ஆயுதப்படை டி.ஐ.ஜி.யான இவர், சென்னை தலைமையக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

* ஆனி விஜயா- மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், திருச்சி சரகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

* நரேந்திரன் நாயர்- சென்னை நிர்வாக பிரிவு டி.ஐ.ஜி.யான இவர், கோவை சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

* ரூபேஷ்குமார் மீனா- ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யான இவர், தஞ்சை சரகத்துக்கு மாற்றப்பட்டார்.

டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு

* அபிஷேக் தீட்சீத்- போலீஸ் சூப்பிரண்டான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

* மல்லிகா- சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று அந்த பிரிவில் தொடர்ந்து பணியாற்றுவார்.

* சாமுண்டிஸ்வரி- காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், பதவி உயர்வு பெற்று காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* லட்சுமி- சென்னை வணிக குற்றப் புலனாய்வு பிரிவு சூப்பிரண்டான இவர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

* ராஜேஸ்வரி- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டான இவர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படைக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பாண்டியன்- சீருடை பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று ரெயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

* ராஜேந்திரன்- சென்னை பூக்கடை துணை கமிஷனரான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மதுரை சரகத்துக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

* முத்துச்சாமி- சென்னை அண்ணாநகர் துணை கமிஷனரான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரகத்துக்கு மாற்றப்பட்டார்.

* மயில்வாகணன்- சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனரான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் சரகத்தில் பொறுப்பு ஏற்பார்.

* ராதாகிருஷ்ணன்- சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனரான இவர், விழுப்புரம் சரக சூப்பிரண்டாக மாற்றப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story