விருதுநகரில் ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


விருதுநகரில் ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 13 July 2020 10:59 AM GMT (Updated: 13 July 2020 10:59 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இவற்றில் சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது.  தொடர்ந்து சமீப நாட்களாக மதுரையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதனால் நாளை (14ந்தேதி) வரை மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதேபோன்று மதுரையை அடுத்த விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  ஒரே நாளில் 10 கர்ப்பிணிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 351 ஆக உயர்ந்து உள்ளது.

இதுவரை கொரோனா பாதிப்புகளுக்கு 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.  919 பேர் குணமடைந்து உள்ளனர்.  ஆயிரத்து 432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story