சென்னையில் கழிவு நீர் தொட்டியை சரி செய்ய முயன்ற இருவர் விஷவாயு தாக்கி பலி


Representative image
x
Representative image
தினத்தந்தி 15 July 2020 12:50 PM GMT (Updated: 15 July 2020 12:50 PM GMT)

சென்னையில் கழிவு நீர் தொட்டியை சரி செய்ய முயன்ற இருவர் விஷவாயு தாக்கி பலியாகினர்.

பட்டினப்பாக்கம்,

சென்னை பட்டினப்பாக்கம் அருகே குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நாகராஜ் மற்றும் ஷாயின் ஷா ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் உடலும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

Next Story