நெல்லை, திருவாரூர், மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு


நெல்லை, திருவாரூர், மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 28 July 2020 5:36 AM GMT (Updated: 28 July 2020 5:36 AM GMT)

நெல்லை, திருவாரூர், மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நெல்லை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.  இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோன பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு உறுதியான மாவட்டங்கள் பின்வருமாறு:-

* நெல்லையில் இன்று காலை நிலவரப்படி மேலும் 343 பேருக்கு கொரனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4306 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 2,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 1,438 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 25 உயிரிழந்துள்ளனர்.

* திருவாரூர் மாவட்டத்தில் காலை நிலவரப்படி இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1541 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது வரை 441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 8 உயிரிழந்துள்ளனர்.

Next Story