கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு - முதலமைச்சர் பழனிசாமி


கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 30 July 2020 6:14 AM GMT (Updated: 30 July 2020 6:14 AM GMT)

கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையிலும் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றி வருகிறார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

* அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது

* அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.

* இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன.

* மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

* தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது.

* மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இவ்வாறு மருத்துவ நிபுணர்களுடன் உரையாற்றி வருகிறார்.

Next Story