வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்த தொழிலாளி சீனிவாசன் உயிரிழப்பு


வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்த தொழிலாளி சீனிவாசன் உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 Aug 2020 9:14 AM GMT (Updated: 2 Aug 2020 9:14 AM GMT)

வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்த தொழிலாளி சீனிவாசன் உயிரிழந்தார்.

சென்னை,

புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்த தொழிலாளி சீனிவாசன் உயிரிழந்தார். 

முன்னதாக போலீசார் விசாரணைக்கு அழைத்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தீக்குளித்த தொழிலாளி சீனிவாசன் உயிரிழந்தார். 

இந்த விவகாரத்தில் புழல் காவல்நிலைய ஆய்வாளர் பென் சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆய்வாளர் தாக்கியதாக தீக்குளித்த சீனிவாசன் வாக்குமூலம் அளித்த நிலையில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Next Story