தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியீடு
தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியீடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,245 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,556 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,67,015 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 53,716 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,703 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-
அரியலூர் 69,
செங்கல்பட்டு 437,
சென்னை 1,187,
கோயம்புத்தூர் 385,
கடலூர் 219,
தருமபுரி 37,
திண்டுக்கல் 138,
ஈரோடு 32,
கள்ளக்குறிச்சி 30,
காஞ்சிபுரம் 315,
கன்னியாகுமரி 127,
கரூர் 45,
கிருஷ்ணகிரி 12,
மதுரை 139,
நாகப்பட்டினம் 34,
நாமக்கல் 72,
நீலகிரி 15,
பெரம்பலூர் 24,
புதுக்கோட்டை 155,
ராமநாதபுரம் 57,
ராணிப்பேட்டை 178,
சேலம் 380,
சிவகங்கை 70,
தென்காசி 92,
தஞ்சாவூர் 22,
தேனி 40,
திருப்பத்தூர் 63,
திருவள்ளூர் 495,
திருவண்ணாமலை 79,
திருவாரூர் 56,
தூத்துக்குடி 60,
திருநெல்வேலி 114,
திருப்பூர் 9,
திருச்சி 9,
வேலூர் 59,
விழுப்புரம் 127,
விருதுநகர் 90 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story