பிரணாப் முகர்ஜி மறைவு - இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு - கனிமொழி, திமுக எம்.பி.


பிரணாப் முகர்ஜி மறைவு - இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு - கனிமொழி, திமுக எம்.பி.
x
தினத்தந்தி 31 Aug 2020 6:20 PM GMT (Updated: 31 Aug 2020 6:20 PM GMT)

பிரணாப் முகர்ஜி மறைவு இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒரு மூத்த பாராளுமன்றவாதியாக, பல்வேறு ஆலோசனைகளை கூறி வழிநடத்தியுள்ளார். சிறந்த நிதியமைச்சராகவும், குடியரசுத் தலைவராகவும் அவர் இந்நாட்டுக்கு ஆற்றிய பணிகள் அளப்பறியது.

அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு என் இரங்கல். தலைவர் கலைஞருடனான இவரின் ஆழ்ந்த நட்பை நாடே அறியும்.  நான் எம்.பியாக பணியாற்றிய சமயத்தில், இவரோடு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மரணம் நம் நாட்டுக்கு பெரும் இழப்பு.

பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் இன்முகத்தோடு பதில் அளித்தவர். எந்த சூழலிலும் கேள்விகளை தவிர்க்காதவர் என பதிவிட்டுள்ளார்.


Next Story