கொரோனா தொற்றினால் சட்டசபை கூட்டத்துக்கு வராத அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள்


கொரோனா தொற்றினால் சட்டசபை கூட்டத்துக்கு வராத அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள்
x
தினத்தந்தி 14 Sep 2020 8:48 PM GMT (Updated: 14 Sep 2020 8:48 PM GMT)

கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்தாலும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கூடியது. ஆனாலும் சிலர் தொற்று ஏற்பட்டதாலும், சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கூட்டத்துக்கு வரவில்லை.

சென்னை, 

கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்தாலும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கூடியது. ஆனாலும் சிலர் தொற்று ஏற்பட்டதாலும், சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கூட்டத்துக்கு வரவில்லை. 

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அ.திமு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்.சரஸ்வதி (திருச்செங்கோடு), சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), ராமச்சந்திரன் (குன்னம்), தூசி கே.மோகன் (செய்யாறு), தி.மு.க. எம்.எல்.ஏ. மதிவாணன் (கீழ்வேளூர்) உள்பட சில எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு நேற்று வரவில்லை.

இவர்கள் தவிர மைதீன்கான் (தி.மு.க.), நியமன உறுப்பினர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் உள்பட சிலர் அவைக்கு வராததால் சுமார் 20 இருக்கைகள் நேற்று காலியாக காணப்பட்டன 

Next Story