திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை - போலீசார் விசாரணை


திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 Sep 2020 2:05 AM GMT (Updated: 27 Sep 2020 2:05 AM GMT)

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி, 

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பட்டது. சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story