பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்துள்ளது.
சென்னை,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், போக்குவரத்து கணிசமாகக் குறைந்ததால் மே மாதம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்தது.
ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதும், கடந்த ஜூன் முதல், அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.91 ரூபாய், டீசல் லிட்டர் 77.30 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று, பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் அதிகரித்து 85.12 ரூபாய்க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து 77.56 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Related Tags :
Next Story