புறநகர் மின்சார ரெயில்களில் இன்று முதல் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


புறநகர் மின்சார ரெயில்களில் இன்று முதல் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2020 1:50 AM GMT (Updated: 23 Dec 2020 1:50 AM GMT)

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் இன்று முதல் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா பரவல் தளர்வை தொடர்ந்து சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் முன்கள பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அத்தியாவசிய பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய ரெயில்வே அனுமதி வழங்கியது. பொதுமக்கள் அனைவருக்கும் எப்போது அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) முதல் பொதுமக்கள் அனைவரும் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மின்சார ரெயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதாவது ரெயில் சேவை தொடங்கும் அதிகாலை நேரத்தில் இருந்து காலை 7 மணி வரையும், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், இரவு 7 மணியில் இருந்து சேவை முடிவடையும் நேரம் வரையிலும் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறை களை பயணத்தின்போது கண்டிப்பாக பின்பற்றவேண்டும் மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story