அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம்; பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார்: எல்.கே.சுதீஷ்
பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார்: அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம் என தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
சென்னை:
தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:–சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்து விட்டீர்களா?
பதில்:–விரைவில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு குறித்து எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி விஜயகாந்த் முடிவு செய்வார்.
கேள்வி:கூட்டணியில் மாற்றம் வருமா?
பதில்:–இப்போதைக்கு எதுவும் இல்லை. அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். தேர்தல் தேதியை அறிவிக்கப்பட்டும், பின்னால் பேசுவோம்.
கேள்வி:–விஜயகாந்தை எப்போது பார்க்கலாம்?
பதில்:–தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார். கண்டிப்பா நீங்கள் பார்க்கலாம்.
கேள்வி:–அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை மு.க.ஸ்டாலின் கவர்னரிடம் கொடுத்து இருக்கிறாரே?
பதில்:–அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் உண்மை இருந்தால் கவர்னர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story