வேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
வேளாண் சட்டங்களை செயல்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கருத்துகளை மத்திய அரசு கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய இடையீடு அரசியலமைப்பின் நடைமுறைகளின்படி மத்திய அரசு தனது கடமைகளை சரிவர ஆற்றி வரவில்லை என்பதையே காட்டுகிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை கருத்தில் கொண்டும், லட்சக்கணக்கான விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள் அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு செவிசாய்த்து வேளாண் சட்டங்களை செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உள்ளூர் பாஜக தலைவரின் வீட்டு முன் மாட்டுச்சாணம் கொட்டிச்சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.